Updated: 22-07-2022 07:05 pm
நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சியின் சார்பில் பழங்குடியினத்தை சோ்ந்த திரவுபதி முர்மு போட்டியிட்டார்.
இதில் எதிர்கட்சிகளின் வேட்பாளாராக யஷ்வந்த் சின்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
.
கர்நாடகாவில் தரிகெரே, கடூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் திரவுபதி முர்முவின் வெற்றியை கொண்டாடினர். அதன்படி சிக்கமகளூரு டவுன் அனுமந்தப்பா சர்க்கிள் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள், திரவுபதி முர்முவின் வெற்றியை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவின் பழஙகுடியின மக்கள் பட்டாசு வெடடித்து இனிப்புகளை வழஙகி கொண்டாடினர்.#New Indian president