Updated: 26-09-2024 09:22 pm
கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகள் ஆய்வு தொடர்பான அறிக்கையை ஜிப்மர் மருத்துவ குழுவினர் இன்று அல்லது நாளை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி(17), கடந்த மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
இதை கண்டித்து கடந்த 17ம் தேதி நடந்த போராட்டம் கலவரமானது. இதில் பள்ளி வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டது.பிரேத பரிசோதனை முடிவை அறிக்கையை இன்று அல்லது நாளை நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவக்குழு சமர்ப்பிக்கும்.அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.#srimathi
Apply Now