Updated: 16-01-2022 07:09 pm
சுனாமி ஏற்பட வாய்ப்பு- எச்சரிக்கை விடுத்த நாடுகள்!
தெற்கு பசிஃபிக் பகுதியில் எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி அலைகள் ஏற்படலாம் என அமெரிக்கா , ஜப்பான் ஆகிய நாடுகளின் அரசுகள் முன்னெச்சரிக்கை விடுத்து அங்கிருந்து வீடுகளை காலி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
டோங்கா, ஃபிஜி தீவுகளை அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகளில், கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதிகளில் கடும் புகை மூட்டம் உண்டாகியுள்ளது.கடலுக்கடியில் மிகப்பெரிய சத்தத்துடன் வெடிச்சிதறியதில் மிகப் பெரிய அளவில் அலைகள் மேலெழும்பியது.
இதனால் அப்பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களை வீடுகளை விட்டு வெளியேறி பத்திரமான பகுதிக்கு செல்லுமாறு அமெரிக்கா மற்றும் ஜப்பான் அரசுகள் எச்சரிக்கை கிடைத்துள்ளன.#tsumani